இளம்பெண்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா அறிவுரை

இளம்பெண்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா அறிவுரை 

தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.  இவர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இந்நிலையில், டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் நடிகை ராஷ்மிகாவை தவறாக சித்தரித்து வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதற்கு வேதனை தெரிவித்து ராஷ்மிகா இணையத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு பிரபலங்கள், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் பிரபல பாலிவுட் நடிகை ஆலிபா பட்டும் பாதிக்கப்பட்டுள்ளார். ராஷ்மிகா மற்றும் கஜோலைத் தொடர்ந்து ஆலியா பட்டின் புகைப்படத்தையும் படு மோசமாக சித்தரித்திருந்தனர். 

இளம்பெண்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா அறிவுரை 

இது குறித்து முதல் முறையாக வெளிப்படையாக பேசியுள்ளா ராஷ்மிகா மந்தனா, டீப் ஃபேக் வீடியோ என்பது சாதாரணமானது அல்ல என்பதை இளம்பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்று தங்களை பாதிக்கும்போது, அமைதியாக இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

Share this story