கார் விபத்து வழக்கு.. மீண்டும் ஆஜராக யாஷிகாவிற்கு உத்தரவு !

yashika anand

 கார் விபத்து வழக்கில் மீண்டும் ஆஜராக நடிகை யாஷிகாவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான இருப்பவர் யாஷிகா ஆனந்த். ‘துருவங்கள் 16’,  ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘நோட்டா’,  ‘ஜாம்பி’ ஆகிய படங்களில்  நடித்துள்ளார்.  சினிமாவை தாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இதற்கிடையே கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை ஈசிஆரில் விபத்து ஒன்றில் சிக்கினார். 

yashika anand

தனது நண்பர்களுடன் இரவு விருந்து ஒன்றை முடித்துவிட்டு காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது மாமல்லபுரம் அருகே கார் விபத்திற்குள்ளானது. இதில் யாஷிகா, அதிர்ஷ்ட வசமாக படுகாயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் அவரது தோழி வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கடுமையான உத்தரவிற்கு பிறகு கடந்த மாதம் நீதிமன்றத்தில் யாஷிகா ஆஜரானார்.

இந்த வழக்கு இன்று ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் யாஷிகா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் ஜூலை மாதம் 27-ஆம் தேதி மீண்டும் யாஷிகா ஆனந்த் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். 

 

Share this story