‘ஏலே’ படத்தின் அழகியல் திருடப்பட்டுள்ளது - இயக்குனர் ஹலீதா ஷமீம் !

HalithaShameem

‘ஏலோ’ படத்தின் அழகியல் களவாடப்பட்டுள்ளது சற்றே அயற்சியை தருகிறது என இயக்குனர் ஹலீதா ஷமீம் தெரிவித்துள்ளார். 

மலையாளத்தில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லிஜோ ஜோஸ். ஆமென், அங்காமலி டைரீஸ், ஈ.மா.யூ, ஜல்லிக்கட்டு, சுருளி என பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். அவரின் அடுத்த படைப்பாக உருவாகி வெளியான திரைப்படம் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. மம்மூட்டி நடிப்பில் வெளியான இந்த படம் கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 

HalithaShameem

இந்நிலையில் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை ‘ஏலோ’ படத்தின் இயக்குனர் ஹலீதா ஷமீம் வைத்துள்ளார். அதில் ‘ஏலே’ படத்திற்காக ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்கு தயார் செய்து முதல்முதலில் அக்கிராமத்தில் அவர்களையும் நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினோம். அதே கிராமத்தில் 'நண்பகல் நேரத்து மயக்கம்' படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே.

HalithaShameem

ஆனால், நான் பார்த்து, பார்த்து சேர்த்த அழகியல் யாவும் இந்த படம் நெடுக, களவாடப்பட்டிருப்பது சற்றே அயற்சியை தருகிறது. 

ஐஸ்காரர்.. இங்கே பால்க்காரர். அமரர் ஊர்தி பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடியது. செவலை. நான் அறிமுகப்படுத்திய 'சித்திரை சேனன்' நடிகர்-பாடகர், ஏலே-வில் நடித்த கலைக்குழு பாடகர் கதாபாத்திரம் போலவே, இங்கு மம்மூட்டி அவர்களுடன் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்.

படமாக்கப்பட்ட வீடுகள், பல முறை பார்த்து பின் நான் படமாக்கப்பட வேண்டாம் என்று நிராகரித்த வீடுகள். இவையாவும் படத்தில் பார்த்தேன். நடக்கும் நிகழ்வுகள், பின்னே ஓடும் ஜாக்கி சான் பட வசனத்தோடு ஒத்துப்போவது போல், ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் நிறைய உள்ளன.   

எனக்காக நான் தான் பேச வேண்டும். ஆதங்க பட வேண்டும் என்ற சூழலில் தவிர்க்க முடியாமல் இதை பதிவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.  இயக்குனர் ஹலீம் ஷமீமின் இந்த பதிவு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story