விபத்துக்கு பின் நிதானமாக செயல்பட்ட அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ வைரல்

ak

ஸ்பெயின் நாட்டில் வாலன்சியாவில் நடைபெற்ற கார் ரேஸின் போது அஜித் குமார் சென்ற கார் விபத்துக்குள்ளானது. 


அஜித் குமார் தற்போது ஸ்பெயின் நாட்டில் வாலன்சியாவில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் பங்கேற்றார். இதில், அவர் 5ஆவது சுற்று வரை சிறப்பாக செயல்பட்டு 14ஆவது இடம் பிடித்தார். ஆனால், 6ஆவது சுற்றின் போது அஜித் கார் மீது மற்ற கார்கள் மோதியதில் 2 முறை விபத்து ஏற்பட்டு  முதல் விபத்து ஏற்பட்ட போது அஜித் அதிலிருந்து மீண்டு உடனே டிராக்கில் செயல்பட்டார். ஆனால், 2ஆவது முறை நிகழ்ந்த கார் விபத்தின் போது அவரது பல்டி அடிக்கவே அஜித் 2 முறை கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இது ரசிகர்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. 


இது தொடர்பாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜித் மீது எந்த தவறும் இல்லை என்றும், ஏற்கனவே ஒரு வீடியோ வெளியிட்ட நிலையில், தற்போது மற்றோரு விபத்து தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், விபத்தில் சிக்கிய பின்னர் காருக்குள் அமர்ந்திருந்த அஜித் குமார் என்ன செய்தார் என உள்ளது. கார் விபத்துக்குள்ளாகி கார் இரண்டு முறை காற்றில் அந்தர் பல்டி அடித்து அதன் பின்னர் கார் தரையில் நின்றது.


அப்போது கார் ஆஃப் ஆகிவிட்டதால், நிதானமாக அஜித் காரை ஆன் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் கார் ஆன் ஆகவில்லை. ஆனாலும் விடாமல் அஜித் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தார். இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள சுரேஷ் சந்திரா, Salute to our Chief என பதிவிட்டுள்ளார்.  

  

Share this story