ரஜினிகாந்தின் ஏஐ புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். கடந்த சில நாட்களாக இந்த படத்தில் நடிக்கும், நடிகர் நடிகைகள் பெயரை அறிவித்து வந்தனர். துஷரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில், அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து நடிப்பதாக தெரிவித்தனர். தமிழ் கலைஞர்களுடன் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழி கலைஞர்களும் படத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது நெல்லை பக்கம் படக்குழு திரும்பியுள்ளது. நெல்லை பணகுடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ரஜினிகாந்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். கேங்ஸ்டர், கௌபாய், தோணியில் அவரது புகைப்படங்கள் மாஸாக வெளியாகி இருக்கின்றன.