ராமர் கோயில் விழாவிற்கு அலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதிக்கு அழைப்பு

ராமர் கோயில் விழாவிற்கு அலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதிக்கு அழைப்பு

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா வரும்ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை  செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீராமர் கோயில் குடமுழுக்கு, பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளி பண்டிகையாக இருக்கும் என்பதில், சந்தேகமே இல்லை. அன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். 

ராமர் கோயில் விழாவிற்கு அலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதிக்கு அழைப்பு

இந்நிலையில், பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான அலியா பட் மற்றும் ரன்பீர் கபூருக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து பாலிவுட்டின் மற்ற தம்பதிகளுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளன. 

Share this story