நிம்மதி வேண்டி கோவில் கோவிலாக செல்லும் ‘நடிகை அமலாபால்’ - வைரலாகும் புகைப்படங்கள்.
![photo](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/7990db3da29e7298bd761cd410316340.jpeg)
கேரளத்து வரவான நடிகை அமலாபால், கோலிவுட்டில் மைனா, தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி, காதலில் சொதப்புவது எப்படி, திருட்டு பயலே 2, ராட்சசன் போன்ற சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தனது குடும்பத்தோடு விசிட் அடித்துள்ளார்.
சமீபத்தில் நடிகை அமலாபால், கேராளாவில் உள்ள திருவைராணிகுளம் கோவிலுக்கு சென்றநிலையில், கோவிலின் நெறிமுறைகளை காரணம் காட்டி அதாவது, அந்தக் கோவிலில் இந்துக்களை மட்டுமே அனுமதிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருவதாலும் அமலா பால் கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதாலும் அனுமதி மறுக்கப்பட்டது, இந்த தகவல் இணையத்தில் கசிந்த நிலையில் பேசு பொருளாக மாறியது.
இந்த நிலையில் நடிகை அமலாபால், தனது தாய் மற்றும் தம்பியின் மனைவியுடன், பழனி மலை முருகனை தரிசனம் செய்துள்ளனர். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவிவருகிறது.