ஆன்டி கதாப்பாத்திரம்... நடிகை சிம்ரன் ஆதங்கம்...

simran

‛டப்பா' கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட முக்கியமான 'ஆன்டி' கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார். 

90களில் முன்னண நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். பல படங்களில் நாயகியாக நடித்தாலும், இவரது நடன அசைவுக்கு பலரும் ரசிகர்களாக இருந்தனர். சில படங்களில் கதாநாயகியாக இருந்தாலும் குழந்தைக்கு தாய் போன்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். குறிப்பாக ‛கன்னத்தில் முத்தமிட்டாள்' படத்தில் இவரது நடிப்பு வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் அஜித் நடித்த ‛குட் பேட் அக்லி' படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்து பாராட்டை பெற்றார். தற்போது நடிகர் சசிகுமாருடன் ‛டூரிஸ்ட் பேமிலி' படத்திலும் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக லோகேஷ் குமார் இயக்கி வரும் ‛தி லாஸ்ட் ஒன்' படத்திலும் நடித்து வருகிறார்.


இந்நிலையில் தனியார் விருது விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற சிம்ரன் பேசியதாவது: சமீபத்தில் சக நடிகையிடம் ஒருவரிடம் ஏன் இந்தப் படத்தில் நடித்தீர்கள் என ஆச்சரியமாகக் கேட்டேன். அதற்கு உடனடியாக, ' ஆன்டி கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட இது சிறந்தது' என அவரிடமிருந்து பதில் வந்தது. அந்த பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு புரிதலற்ற பதிலை எதிர்பார்க்கவில்லை. இதைவிடவும் நல்ல பதில் எனக்குக் கிடைத்திருக்கலாம்.simran

நான் 25 வயதிலேயே முக்கியமான 'ஆன்டி' கதாபாத்திரத்தமாக ‛கன்னத்தில் முத்தமிட்டாள்' படத்தில் நடித்துள்ளேன். ‛டப்பா' கதாபாத்திரங்களில் நடிப்பதைவிட முக்கியமான 'ஆன்டி' கதாபாத்திரத்தில் நடிக்கலாம்'' என காட்டமாக பேசினார் சிம்ரன். அவர் குறிப்பிட்ட அந்த நடிகை யாராக இருக்கும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலவிதமான கருத்துகளை கூறி வருகின்றனர்.

Share this story