விறுவிறுப்பாக படமாகும் ‘அரண்மனை 4‘... பிரபல நடிகை கொடுத்த செம்ம அப்டேட் !

SundarC

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரண்மனை 4’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

பிரபல இயக்குனரான சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் ஹாரர் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் அவர் இயக்கத்தில் வெளியான அரண்மனை படங்கள் மாபெரும் வெற்றிப் பெற்றன. மூன்று பாகங்களின் வெற்றிக்கு பிறகு அரண்மனை படத்தின் நான்காம் பாகம் உருவாகி வருகிறது. 

SundarC

இந்த படத்தில் கதாநாயகனாக சுந்தர் சியும், முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானமும் நடித்து வருகின்றனர். கதாநாயகிகளாக தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகிய இரு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்த படம் உருவாகி வருகிறது. 

கடந்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் இன்று தொடங்கியுள்ளது. தற்போது இந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.    

 

Share this story