“உலகின் அழகான பெண் அவள்……..”- அசோக் செல்வனின் தரமான பதிவு.

photo

நடிகை கீர்த்தி பாண்டியனை நடிகர் அசோக் செல்வன் கரம்பிடித்த நிலையில் தற்போது தனது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தரமான கேப்ஷன் கொடுத்துள்ளார்.

photo

விஜய் சேதுபதியுடன் இணைந்துசூது கவ்வும்படத்தின் மூலமாக அறிமுகமானவர் அசோக் செல்வன், தொடர்ந்து தெகிடி, மை கடவுளே, பீட்சா 2 வில்லா, மன்மத லீலை, போர் தொழில் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் இன்று பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகளும், ‘தும்பா’, ‘ அன்பிற்கினியாள்’ படங்களின் கதாநாயகியுமான  கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருநெல்வேலி, பாளையங்கோட்டையில்  உள்ள இட்டேரியில் உள்ள அருண் பாண்டியனின் பண்ணை வீட்டில் கோலாகலமாக கடந்த 13ஆம் தேதி நடந்தது.

photo

தொடர்ந்து அவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலானது. அதற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து கமெண்ட் செய்திருந்தனர். இது மட்டுமல்லாமல் கீர்த்தி குறித்த நிறைய உருவ கேலி கமெண்டுகளும் குவிந்தன. தற்போது அவற்றிற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக  அசோக் செலவன்  கீர்த்தியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “ உலகின் மிக அழகான பெண்ணுடன் நான்..” என தரமான கேப்ஷன் கொடுத்துள்ளார்.

Share this story