இறுதிக்கட்டத்தில் பாலாவின் ‘வணங்கான்’... ஷூட்டிங் குறித்து புதிய அப்டேட்

vanagaan
பாலா - அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்‘ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

பிரபல இயக்குனரான பாலா, சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ படத்தை இயக்கி வந்தார். ஆனால் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சூர்யா படத்திலிருந்து விலகிவிட்டார். அதனால் நடிகர் அருண் விஜய்யை  வைத்து மீண்டும் ‘வணங்கான்’ படத்தை இயக்குனர் பாலா தொடங்கினார். 

vanagaan

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே ஒப்பந்தமான கீர்த்தி ஷெட்டி விலகிய நிலையில் கன்னட நடிகை பிரபல கன்னட நடிகை ரோஷினி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே தமிழில் அவர் 'ஜடா', ஏமாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்

vanagaan

மீனவர் கதைக்களம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்ததது. இதில் அருண் விஜய் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்று விடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 

Share this story