மேடையிலேயே அழுத பூமிகா -எதனால் தெரியுமா ?

bhoomika
இந்தியாவில் பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள பூமிகா, தற்போது தெலுங்கில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கும் படம், ‘யூஃபோரியா’. இது திரைக்கு வந்துள்ளது. முன்னதாக இப்பட நிகழ்ச்சியில் பேசிய அவர், திடீரென்று மேடையில் கண்கலங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘இப்படத்தில் நான் நடிக்க தொடங்கிய நாள் முதல், என்னால் இரவு நேரத்தில் நிம்மதியாகவே தூங்க முடியவில்லை’ என்றார். அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
உடனே அருகில் இருந்தவர்கள் பூமிகாவை சமாதானப்படுத்தினர். இதனால் அந்த நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர் அழுததற்கு காரணம், இப்படம் சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும். இச்சம்பவம் குறித்த தாக்கங்கள் அவரது மனதில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியதாலேயே இப்படி கதறியழுதார்.

Share this story