கொடைக்கானலில் அனுமதி இன்றி பங்களா: பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவுக்கு நோட்டீஸ்
![கொடைக்கானலில் அனுமதி இன்றி பங்களா: பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவுக்கு நோட்டீஸ்](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/0a1ff7e1d484d72680d5ddf0c04518e1.jpg)
நடிகர் பாபி சிம்ஹா தமிழில் தனக்கான இடத்தைப் பிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். ‘ஜிகர்தண்டா’ படத்தின் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்ற அவர் ‘உறுமீன்’, ‘திருட்டுப்பயலே’ உள்ளிட்ட படங்களில் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜின் பேவரைட் நடிகர்களில் பாபி சிம்ஹா முக்கியமானவர். எனவே தனது அனைத்து படங்களிலும் அவருக்கு ஒரு சான்ஸ் கொடுத்துவிடுவார். 'சீறும் புலி', 'வல்லவனுக்கு வல்லவன்', வசந்தமுல்லை ஆகிய திரைப்படங்கள் அவரது நடிப்பில் வெளிவந்துள்ளன. தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கொடைக்கானலில் அனுமதியின்றி பாபி சிம்ஹா மற்றும் பிரகாஷ் ராஜ் இருவரும் பங்களா கட்டி வருவதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 24-ம் தேதி தள்ளி வைத்துள்ளனர்.