ரசிகர்களை குழப்பும் கேப்டன் மில்லர் இயக்குநர்

ரசிகர்களை குழப்பும் கேப்டன் மில்லர் இயக்குநர்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கும் தனுஷ், நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், ஆங்கில நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  இந்த படத்தை 'ராக்கி', சாணிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக இப்படம் உருவாகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.  படப்பிடிப்பு பணிகள் நிறைவு அடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. 

ரசிகர்களை குழப்பும் கேப்டன் மில்லர் இயக்குநர்

இந்நிலையில், படம் குறித்து பேசிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன், கேப்டன் மில்லர்' படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கின்றன. இப்போது வெளியாகும் பாகம் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த பாகத்தை தொடரலாம். பெரிய பட்ஜெட் என்பதால், இரண்டாம் பாகத்தை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

Share this story