போர் காட்சிகளை படமாக்கும் ‘கேப்டன் மில்லர்’ குழுவினர்.. திடீரென இணையத்தில் லீக்கானதால் அதிர்ச்சி !

dhanush

தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக்கானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

‘வாத்தி’ படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. 'ராக்கி', சாணிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது. 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக இப்படம் உருவாகிறது.

dhanush

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  

dhanush

இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பிரீயட் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் செட் போட்டு படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது குற்றாலம் வனப்பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது பிரம்மாண்டமான போர் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வரும் நிலையில் அந்த காட்சி யாரோ மொபைலில் படப்பிடித்து இணையத்தில் கசியவிட்டுள்ளனர். இதை பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Share this story