நடிகர் காதல் சுகுமார் மீது வழக்கு பதிவு.. என்ன காரணம்...?

sugumar

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண்ணிடம் இருந்து நகை மற்றும் பணத்தை ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாகப் பிரபல நடிகர் காதல் சுகுமார் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

 
தமிழ் சினிமாவில், சிம்புவின் காதல் அழிவதில்லை, கமல்ஹாசன் நடித்த விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தவர் காதல் சுகுமார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் படத்தில் இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களைப் பெற்றது.  இதனால் காதல் சுகுமார் என்று அழைக்கப்படும் இவர், 50-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் திருட்டு விசில், சும்மாவே ஆடுவோம் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.இதனிடையே தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னிடம் இருந்து நகை மற்றும் பணத்தை, ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாக நடிகர் சுகுமார் மீது கடந்த ஜனவரி மாதம் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார். சென்னையைச் சேர்ந்த அந்த பெண் சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். திருமணமாகி குழந்தையுடன் வசித்து வரும் அவர், கணவரைப் பிரிந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக சுகுமாருடன் அவருக்குப் பழக்கம் இருந்தாக கூறியுள்ளார்.sugumar

அவரை காதலிப்பதாக கூறியுள்ள சுகுமார் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, அவரை தனி வீட்டில் வைத்து குடித்தனம் நடத்தியுள்ளார்.  மேலும் அவரிடம் இருந்து அடிக்கடி நகை மற்றும் பணத்தை வாங்கி வந்த சுகுமார், சமீபகாலமாக அவரிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் விசாரித்தபோது சுகுமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது தெரியவந்துள்ளது. ஆனால் திருமணம் ஆனதை மறைத்து தன்னை ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாக அந்த பெண் பகீர் புகார் அளித்துள்ளார்.

முன்னதாக காவல்நிலையத்தில் புகார் அளித்த போது பணத்தைத் திரும்ப தருவதாக ஒப்புக்கொண்ட சுகுமார், பெண்ணிற்கு கொடுத்த வங்கி காசோலையும் பவுன்ஸ் ஆகியதாகத் தெரிகிறது. இதனிடையே சுகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் அளித்த புகாரில் தற்போது அவர் மீது மாம்பலம் மகளிர் காவல்நிலையத்தினர் மூன்று பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். 
 

Share this story