கிறிஸ்தவ மத உணர்வுகளை புண்படுத்தியதாக ’ஜாட்’ படக்குழு மீது வழக்குப்பதிவு!

jaat

கிறிஸ்தவ சமூக மக்களின் மத உணர்வைப் புண்படுத்தியதாக நடிகர் சன்னி தியோல் உள்ளிட்ட ’ஜாட்’ படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு பட இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் சன்னி தியோல், ரன்தீப் ஹூடா, வினீத் குமார் சிங் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான ‘ஜாட்’ திரைப்படம் கடந்த 10ஆம் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தில் இடம்பெற்ற தேவாலய காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், படக்குழுவினர் வேண்டுமென்றே மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் காட்சிகளை உருவாக்கி, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் புனித வெள்ளியை முன்னிட்டு வெளியிட்டுள்ளதாகவும் பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 jaat
அதன்பேரில் இயக்குநர் சந்த் மலினேனி, நடிகர்கள் சன்னி தியோல், ரன்தீப் ஹூடா, வினீத் குமார் சிங் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுப்படுத்தும் வகையிலான காட்சிகள் இருப்பதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Share this story