இயக்குனர் சிம்புதேவனை பாராட்டிய சேரன்..
தளபதி விஜய் நடித்த ’புலி’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவன் 9 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கியுள்ள திரைப்படம் ‘போட்’. இதில், கௌரி கிஷான், எம் எஸ் பாஸ்கர், சின்ன ஜெயந்த், மதுமிதா, லீலா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது ஜப்பான், சென்னையில் குண்டு போட்ட போது, ஒரு சிலர் ஒரு படகில் இந்தியாவில் இருந்து தப்பிச்செல்ல முடிவெடுத்து கடலில் செல்கின்றனர். அப்போது திடீரென படகில் ஓட்டை விழுகிறது, இதனால் ஏற்படும் பிரச்சனை, அவர்களுக்குள் ஏற்படும் அடிதடி, அதன் பின்னர் ஏற்படும் திருப்புமுனை ஆகியவைதான் இந்த படத்தின் கதை என கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் சேரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சிம்புதேவனின் #BOAT திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... ஒரு பெரும் அரசியலை அழகாக எளிமையாக ஒரு படகை வைத்து விளையாடி இருக்கிறார்.. சமீபத்தில் வித்தியாசமான அனுபவத்தை தந்த திரைப்படம்.. சென்னை யாருக்கு சொந்தம் ? யார் உரிமை கொண்டாடுகிறார்கள்.https://t.co/HSe7vI4V30
— Cheran (@directorcheran) July 24, 2024
இயக்குனர் சிம்புதேவனின் #BOAT திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... ஒரு பெரும் அரசியலை அழகாக எளிமையாக ஒரு படகை வைத்து விளையாடி இருக்கிறார்.. சமீபத்தில் வித்தியாசமான அனுபவத்தை தந்த திரைப்படம்.. சென்னை யாருக்கு சொந்தம் ? யார் உரிமை கொண்டாடுகிறார்கள்.https://t.co/HSe7vI4V30
— Cheran (@directorcheran) July 24, 2024
அதில், இயக்குனர் சிம்புதேவனின் #BOAT திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது... ஒரு பெரும் அரசியலை அழகாக எளிமையாக ஒரு படகை வைத்து விளையாடி இருக்கிறார் எனவும், சமீபத்தில் வித்தியாசமான அனுபவத்தை இந்த திரைப்படம் தந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.