புதிய படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் 'கோமாளி' பட இயக்குனர்!
'கோமாளி' படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகயிருக்கும் புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.
பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'கோமாளி' திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு, கேஎஸ் ரவிக்குமார் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாக அப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்து தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார் பிரதீப். இந்நிலையில் அவரது அடுத்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பிரதீப் ரங்கநாதன் தற்போது ஒரு புதிய படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தப் படத்தை தயாரிப்பாளர் ஸ்டுடீயோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தை இயக்குவதற்கு முன்பே பல குறும்படங்களை இயக்கி உள்ளார். மேலும் சில குறும்படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.
எனவே அவர் அடுத்த படத்தில் தான் நடிப்பது என்று முடிவு எடுத்துள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

