‘கேம் சேஞ்சர்’ படக்குழு மீது புகார்... என்ன காரணம் தெரியுமா..?

ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ படக்குழு மீது துணை நடிகர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, நடித்த படம் ‘கேம் சேஞ்சர்’. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்த இப்படம் ஜனவரி 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. அதில், எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இப்படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதிய நிலையில், அவர் மதுரையில் ஒரு கலெக்டரின் வாழ்க்கையில் நடந்ததை அடிப்படையாக வைத்து எழுதியதாக எஸ்.ஜே.சூர்யா கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்தப் படத்தில், குண்டூர் மற்றும் விஜயவாடாவைச் சேர்ந்த 350 பேர் துணை நடிகர்களாகப் பங்கேற்றனர். இணை இயக்குநர் ஸ்வர்கன் சிவா என்பவர் அவர்களுக்குத் தலா ரூ.1,200 தருவதாகக் கூறியிருந்தாராம். ஆனால் படம் வெளியாகி இவ்வளவு நாள் ஆகியும் பேசியபடி பணத்தைக் கொடுக்கவில்லை என்றும் ஸ்வர்கன் சிவா தங்களை ஏமாற்றிவிட்டதாக வும் குண்டூர் போலீஸ் ஸ்டேஷனில் அவர்கள் புகார் அளித்தனர். அதில் தயாரிப்பாளர் தில் ராஜுவும், இயக்குநர் ஷங்கரும் இணைந்து இந்த விவகாரத்தில் தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.