கூச முனுசாமி வீரப்பன் தொடரில் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு
![கூச முனுசாமி வீரப்பன் தொடரில் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/953d18c9cd7e11c49d5d6637aa35f867.jpg)
தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் வீரப்பன். சந்தன மரம் கடத்தல், யானை தந்தம் கடத்தல், ஆள் கடத்தல் என பல வழக்குகள் அவர் மீது உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடத்தியது, கர்நாடக அமைச்சர் நாகப்பா கடத்தல் ஆகியவை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அவர் மீது தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. மூன்று மாநிலங்களுக்கு சவாலாக இருந்த அவரை கடந்த 2004-ஆம் ஆண்டு தமிழ்நாடு அதிரடிப்படை தலைவர் விஜய்குமார் தலைமையிலான போலீசார் சுட்டுக் கொன்றனர். வீரப்பனின் இறுதி நிமிடங்கள் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. தமிழகத்தின் ஒகேனக்கல் முதல் கர்நாடகாவின் குடகு மலை வரை சுமார் 200 கிலோமீட்டருக்கு மேல் வீரப்பனை போல காடுகளை அளந்து நடந்தவர் யாருமில்லை. அப்படிப்பட்ட வீரப்பன் குறித்து பல ஆவணப் படங்கள், புத்தகங்கள், திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில்ஷரத் ஜோதி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆவணத் தொடர் கூச முனுசாமி வீரப்பன். இதை தீரன் ப்ரொடக்ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார்.
இந்த தொடர் கடந்த டிசம்பர் மாதம் ஜீ தளத்தில் வௌியானது. இந்நிலையில், அந்த தொடரில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் இணையத்தில் வௌியிடப்பட்டு உள்ளன.