மீண்டும் தொடங்கிய ‘கேப்டன் மில்லர்’.. தனுஷ் படத்தின் முக்கிய அப்டேட்

captain miller

தனுஷின் ‘கேப்டர் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

 'ராக்கி', சாணிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

captain miller

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக இப்படம் உருவாகிறது.

captain miller

இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பிரீயட் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் செட் போட்டு படமாக்கப்பட்டு வருகிறது.சமீபத்தில் இப்படத்தின் முக்கியமான காட்சி ஒன்றிற்காக செட் அமைக்கப்பட்டது. இந்த செட் பார்த்த தனுஷ், அதிருப்தி அடைந்து திருப்பி சென்றுவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தென்காசி பகுதியில் தொடங்கியுள்ளது. இதில் தனுஷ் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story