மீண்டும் இணையும் ‘கர்ணன்’ கூட்டணி.. பிரம்மாண்டமாக உருவாகும் தனுஷ் படம்

dhanush

 மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘கர்ணன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ‘அசுரன்’ படத்திற்கு பிறகு தனுஷுக்கு நல்ல பெயரை இந்த படம் வாங்கி கொடுத்தது. இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது என்றால் எப்படி இருக்கும். 

dhanush

ஆம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை பிரம்மாண்டமாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. இந்த படத்திற்கு அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 

‘வாத்தி’ படம் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு பிறகு எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து சூப்பர் ஹிட் இயக்குனர்களுடன் தனுஷ் இணைவது அவரது அடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

 

 

Share this story