நாளை தரமான சம்பவம் இருக்கு.. ‘வாத்தி’ குறித்து வெளியாகும் முக்கிய அப்டேட்

vaathi

 தனுஷின் ‘வாத்தி’ படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. இந்த படத்தை தோழி பிரேமா', முதல் முறையாக இந்த படத்தின் மூலம் நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

vaathi

'மிஸ்டர் மஜ்னு' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இந்த படத்தில் சாய் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்பட உள்ளது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் வெளியாகவிருந்த இந்த படம் தயாரிப்பு பணிகள் தாமதத்தால் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story