தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த மகன்கள்!

d

தனுஷின் மகன்கள் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை படக்குழுவுடன் பார்த்து ரசித்துள்ளார்.

தனுஷ் இயக்கத்தில் இன்று (பிப்ரவரி 21) உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தை உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். பவிஷ் இதில் கதாநாயகனாக நடிக்க அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், ரம்யா ரங்கநாதன், சரண்யா பொன்வண்ணன், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். neek

ரொமான்டிக் காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகி உள்ளது. தனுஷ் சொன்னதைப் போல் இந்த படம் வழக்கமான காதல் கதையாக இருந்தாலும் தனுஷ் ஸ்டைலில் இந்த படம் எப்படி எடுக்கப்பட்டிருக்கும் என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். அதன்படி இப்படத்தை திரையரங்குகளில் காண பலரும் கூட்டமும் கூட்டமாக திரண்டு வருகின்றனர். neek

இந்நிலையில் தான் தனுஷின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோர் சென்னை, ரோகினி திரையரங்கில் இப்படத்தின் கதாநாயகன் பவிஷுடன் இணைந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.

neek

அதாவது தன்னுடைய அப்பா இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தை, யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கைதட்டி, என்ஜாய் பண்ணி படத்தை பார்த்து ரசிக்கிறார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story