‘மௌன ராகம்’ பட நடிகர் ரா. சங்கரன் காலமானார்.

photo

‘மௌன ராகம்’ படத்தில் நடித்த நடிகரான ரா. சங்கரன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 95.

photo

‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ என்ற படத்தின் மூலமாக சினிமாவுக்குள் 1974ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர் ரா. சங்கரன். தொடர்ந்து வானம், தேன் சிந்துதே, தூண்டில் மீன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் மணிரத்னத்தின் மௌனம் ராகம் படத்தில் ரேவதிக்கு தந்தையாக சந்திரமௌலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என கார்த்தி இவரை கூப்பிடும் வசனம் மிக பிரபலம்.

தொடர்ந்து முதுமை காரணமாக சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர் தனது 95வது வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this story