விஜய் போன்றவர்கள் சினிமாவை விட்டுப் போவது சினிமாத்துறைக்கு மிகப்பெரிய நஷ்டம் : இயக்குனர் மிஷ்கின்

vijay

கமலஹாசன்,ரஜினிகாந்த் சினிமாவைவிட்டு சென்றால் எப்படி ஒத்துக்க முடியாதோ அதேபோல் விஜயும் அஜித்தும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.  

நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் திரை பிரபலங்களுக்கு அப்படம் திரையிடப்பட்டது. இதை காண்பதற்காக இயக்குனர் மிஷ்கின், பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி,தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ,நடிகை குட்டி பத்மினி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குனர் மிஷ்கின், கல்லூரி படிக்கும் காலத்திற்கு மீண்டும் ஒரு முறை சென்று வந்தது போல் இருந்தது.டைம் டிராவல் மூலம் பின்னால் போனது போலவும் இருந்தது. நான் 27 வருடங்கள் சினிமா துறையில் இருந்திருக்கிறேன் நான் சந்தித்த மிகவும் ஆச்சரியமான மனிதர்களில் கலைப்புலிதாணுவும் ஒருவர் என்னை ஒரு மகன் போல் பார்த்துக் கொள்கிறார். அவர்தான் என்னை இந்த படம் பார்ப்பதற்காக அழைத்தார். என்னுடைய திரை வாழ்க்கையை விஜயின் படம் யூத்தில் தான் ஆரம்பித்தது .vijay

சச்சின் படத்தை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன் ரொம்ப பிடித்திருந்தது மிகவும் ஜாலியான, அழகான, காதலிக்கும் பொழுது எப்படி குழந்தைத்தனமாக இருப்போமோ அதையெல்லாம் வைத்து ஒரு படம்.  எனக்கு இந்த படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தை நான் மிகவும் ரசித்தேன். எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் போன்றவர்களின் படங்களை எப்படி திரும்பத் திரும்பப் பார்க்கிறோமோ அதுபோல விஜயும் அந்த வட்டத்திற்குள் உள்ளே வந்து விட்டார். நம் வாழ்க்கை பெரும் வலியோடு சென்று கொண்டிருக்கிறது இதுபோல சின்ன சின்ன படங்கள் பார்க்கும்பொழுது வாழ்க்கை ஒரு இதமாகமாறுகிறது இந்த படத்தை நான் அப்படித்தான் பார்க்கின்றேன். நான் ஒரு சீரியசான இயக்குனர் என்னுடைய படங்கள் இது மாதிரி இருக்காது. இதுபோன்ற ஒரு ஜாலியான படம் பார்த்ததற்காக கலைப்புலி தானுக்கு நன்றி சொல்கிறேன். vijay

இந்த படத்தில் விஜய் மிகவும் அழகாக இருந்தார். நான் யூத் படத்தில் வேலை செய்யும் பொழுது விஜய் மிகவும் அழகாக இருப்பார் எனக்கு தெரிந்து அவருடைய சினிமா வாழ்க்கையில் மிகவும் அழகாக இருந்த படம் இதுவாக தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். விஜய் கலைத்துறையை விட்டு போகவே மாட்டார் அவர் நடித்துக் கொண்டே இருப்பார் என நினைக்கின்றேன். அவர் அரசியல் ரீதியாகவும் வேலை பார்க்க வேண்டும் அதே சமயத்தில் படங்களிலும் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். விஜய் போன்றவர்கள் சினிமாவை விட்டுப் போவது சினிமாத்துறைக்கு மிகப்பெரிய நஷ்டம்.கமலஹாசன் ரஜினிகாந்த் சினிமாவை விட்டால் எப்படி ஒத்துக்க முடியாதோ அதேபோல் விஜயும் அஜித்தும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கக்கூடிய நடிகர்கள் அவ்வளவு சீக்கிரம் சினிமா துறையை விட்டு செல்லக்கூடாது. குறைந்தது வருடத்திற்கு ஒரு படமாவது பண்ண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


விஜயின் அரசியல் பயணம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த இயக்குனர் மிஷ்கின், நான் அரசியல்வாதி கிடையாது சினிமாக்காரன் என்னுடைய சினிமா வாழ்க்கை ஆரம்பிக்கும் பொழுது விஜய் படத்திலிருந்து தான் வந்தேன் இங்கு அரசியல் வேண்டாம் வேறு இடத்தில் அரசியல் பேசுவோம் ஆனால் என்னுடைய வாழ்த்துக்கள் எப்பொழுதுமே விஜய்க்கு இருந்து கொண்டே இருக்கும் என கூறினார். 

Share this story