52 வது திருமண நாள் : மனைவி குறித்து இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் நெகிழ்ச்சி...!

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்- ஷோபனா தம்பதியினர் இன்று 52வது திருமண நாள் கொண்டாடும் நிலையில் மனைவி குறித்து எஸ் ஏ சந்திரசேகர் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமா இயக்குனரும், நடிகரும், நடிகர் விஜயின் தந்தையுமானவர் எஸ் ஏ சந்திரசேகர், இயக்குனராக பல சாதனைகளை படைத்தாலும் இப்போது நடிகராகவும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தயாரிப்பாளராக படங்களையும் தயாரித்திருக்கிறார். தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு தேவையான அறிவுரைகளையும் சந்திரசேகர் வழங்கி வருகிறார்.
WEDDING ANNIVERSARY GIFT FOR MY LOVE♥️ pic.twitter.com/FCCaXbnIqo
— S A Chandrasekhar (@Dir_SAC) April 24, 2025
இந்த நிலையில் சந்திரசேகர் இன்று தன்னுடைய 52 வது திருமண நாளை கொண்டாடி வருகிறார். தனது திருமண நாளில் தனது மனைவியான ஷோபனாவுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவர் மனைவி குறித்து நெகிழ்ச்சியாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
…true love is never blind, but rather brings an added light. pic.twitter.com/bSJ9lQ6DPg
— S A Chandrasekhar (@Dir_SAC) April 24, 2025
அதில், 52 ஆண்டுகள் திருமண வாழ்வில் நிறைய பிரச்சனைகள், தொல்லைகளை கொடுத்தாலும், மனைவி ஷோபனா தன்னுடன் இத்தணை ஆண்டுகள் வாழ்ந்துள்ளார், அதனால் அவரை மகிழ்விக்கும் நோக்கத்தில் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை பரிசளித்ததாக தெரிவித்துள்ளார்.