கேப்டன் மறைவுக்கு இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் இரங்கல்

கேப்டன் மறைவுக்கு இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் இரங்கல் 

கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. தொடர்ந்து வெற்றிகொடி நாட்டிய அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் வாழ்விலிருந்து விலகினார். இருந்தும் அறிக்கை வாயிலாக அரசியல் செய்தார். இந்த நிலையில் சமீபகாலமாக உடல்நிலை மிகவும் மோசமாகவே தொடர் சிகிச்சையில் இருந்து வந்த விஜயகாந்த் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  இன்று காலமானார். அவரது இறப்பு செய்தி பலரையும் அதிரவித்துள்ளது. தொடர்ந்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் இரங்கள் பதிவிட்டு வருகின்றனர்.

கேப்டன் மறைவுக்கு இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் இரங்கல் 

அந்தவகையில், பிரபல இயக்குநர் பா ரஞ்சித், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல, இயக்குநர் மாரி செல்வராஜும் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், அலையோசை இருக்கும் வரை கேப்டனின் நினைவோசை இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 
 

Share this story