சம்பள பாக்கியை வாங்க மறுத்த சாய் பல்லவி - எந்த படத்திற்காக தெரியுமா?
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ப்ரேமம். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் பல்லவி. இவர் தமிழில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷின் மாரி 2, சூர்யாவின் NGK போன்ற படங்களில் நடித்துள்ளார்.தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் சாய்பல்லவி, முன்பு தான் நடித்த படம் ஒன்று தோல்வியடைந்ததால் சம்பள பாக்கியை வாங்க மறுத்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?ஆம், கடந்த 2018-ம் ஆண்டு ஹனு ராகவபுடி இயக்கத்தில் வெளியான பாடி பாடி லெச்சே மனசு படம் வெறும் ரூ. 8 கோடி மட்டுமே வசூலித்து தோல்வியடைந்தது.
இதனால், படத்தில் கையெழுத்திடும்போது வாங்கிய தொகையை தவிர பாக்கி பணத்தை சாய் பல்லவி வாங்க மறுத்திருக்கிறார். அவ்வாறு அவர் தியாகம் செய்த பணம் ரூ. 40 லட்சத்தை நெருங்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில், சிவகார்த்திகேயனுடன் 'அமரன்' திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற சாய்பல்லவி, தற்போது நாக சைதன்யாவுடன் ’தண்டேல்' படத்திலும், பாலிவுட்டில் 'ராமாயணம்' படத்திலும் நடித்து வருகிறார்.