லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்.. பலர் விமர்சிப்பதாக நயன்தாரா வேதனை...
![லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்.. பலர் விமர்சிப்பதாக நயன்தாரா வேதனை...](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/a5e4ce52b8e2b3cbf1074db140808333.jpg)
கடந்த 20 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கோலோச்சி வருபவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். பிசியான நடிகையாக இருந்து வரும் நயன்தாரா, தனது நீண்ட நாள் காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துக்கொண்டார். திருமணமாகி 4 மாதத்தில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதன்பிறகு அந்த குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்தது என அறிவித்தனர். தனது இரட்டை குழந்தைகளுக்கு உயிர் தெய்விக் N சிவன் மற்றும் உலக் தெய்விக் N சிவன் என்று பெயர் வைத்துள்ளார். அவ்வெப்போது தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை நயன்தாரா வெளியிட்டு வருகிறார். அண்மையில் அவரது நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் அன்னபூரணி.
இப்படத்தின் நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, தன்னை யாரும் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்க வேண்டாம். 10 பேர் என்னை அவ்வாறு அன்புடன் அழைக்கும்போது, பலர் தன்னை விமர்சிப்பதாக தெரிவித்துள்ளார்.