போதைப்பொருள் விவகாரம் : நடிகர் ஷைன் டாம் சாக்கோவிற்கு ஜாமீன்...!

shine tom

போதைப் பொருள் வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கேரள போலீசார் கைது செய்த நிலையில், விசாரணைக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மலையாள திரைத்துறையில் நடிகர், நடிகைகளிடம் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அண்மைக் காலமாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வருகின்றன. இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தில் நடித்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கியுள்ளார்.சில நாட்களுக்கு முன் கொச்சியில் உள்ள தனியார் விடுதியில் கேரள போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது, விடுதியில் இருந்த நடிகர் சாக்கோ, தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

 shine
இந்நிலையில், விடுதியில் இருந்து தப்பியோடியது குறித்து விசாரணைக்கு ஆஜராக சாக்கோவுக்கு கேரள போலீசார் சம்மன் அனுப்பினர். எர்ணாகுளத்தில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான சாக்கோவிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து, போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் நடிகர் சாக்கோ மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், நடிகர் சாக்கோ பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Share this story