விஜயகாந்தை கொலை செய்தவர்களை கண்டுபிடியுங்கள்... பிரபல இயக்குநர் பதிவால் சர்ச்சை...

விஜயகாந்தை கொலை செய்தவர்களை கண்டுபிடியுங்கள்... பிரபல இயக்குநர் பதிவால் சர்ச்சை...

கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. தொடர்ந்து வெற்றிகொடி நாட்டிய அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் வாழ்விலிருந்து விலகினார். இருந்தும் அறிக்கை வாயிலாக அரசியல் செய்தார். இந்த நிலையில் சமீபகாலமாக உடல்நிலை மிகவும் மோசமாகவே தொடர் சிகிச்சையில் இருந்து வந்த விஜயகாந்த் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  இன்று காலமானார். அவரது இறப்பு செய்தி பலரையும் அதிரவித்துள்ளது. தொடர்ந்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் இரங்கள் பதிவிட்டு வருகின்றனர்.

விஜயகாந்தை கொலை செய்தவர்களை கண்டுபிடியுங்கள்... பிரபல இயக்குநர் பதிவால் சர்ச்சை...

இந்நிலையில் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரனின் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், விஜயகாந்த்தை கொலை செய்தவர்களையும், ஜெயலலிதாவை கொலை செய்தவர்களையும் உதயநிதி கண்டுபிடிக்க வேண்டும் என அவர் பதிவிட்டிருந்தார். இப்பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் அவரை வசைபாடி கமெண்ட் செய்து வருகின்றனர். 

Share this story