‘கிரிமினல்’ படப்பிடிப்பை முடித்த கெளதம் கார்த்திக்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் !

criminal

கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் ‘கிரிமினல்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

criminal

இயக்குனர் தட்சிணாமூர்த்தி ராமர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கிரிமினல்’. இந்த படத்தில் சரத்குமார் போலீஸ் அதிகாரியாகவும், கௌதம் கார்த்தி குற்றவாளியாகவும் நடித்து வருகின்றனர். நடிகர் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

criminal

சாம் சிஎஸ் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பாரா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்டர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். மதுரையைப் பின்னணியாக கொண்டு நடக்கும் க்ரைம் த்ரில்லர் கதையாக இப்படம் உருவாகிறது.

criminal

கடந்த ஜனவரி மாதம் இறுதியில் பூஜையுடன் தொடங்கிய இந்த படம் ஒரே கட்டமாக 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் அனைத்து காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் நேற்று இப்படத்தின் படப்பிடிப்பை ஒட்டுமொத்தமாக படக்குழுவினர் நிறைவு செய்துள்ளனர். இதையொட்டி ‘கிரிமினல்’ படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதையடுத்து உடனடியாக தயாரிப்பு பணிகளை தொடங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். 

Share this story