போதை மறுவாழ்வு மையத்தில் ‘குட் பேட் அக்லி’ பட நடிகர்...

shine

‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழில் வெளியான ‘பீஸ்ட்’, ‘குட் பேட் அக்லி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ஷைன் டாம் சாக்கோ. இவர் மலையாளத்தில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர். இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் ஷைன் டாம் சாக்கோ, போதைப்பொருட்களை படப்பிடிப்பு தளத்திலேயே பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. அண்மையில் நடிகை ஒருவரும் இது தொடர்பாக குறிப்பிட்டிருந்தார்.shine

இந்நிலையில், கொச்சியில் உள்ள தனியார் விடுதியில் கேரள போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது, விடுதியில் இருந்த நடிகர் சாக்கோ, தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகின.இதையடுத்து அவரிடம் காவலர்கள் நடத்திய விசாரணையில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கலால்துறை அதிகாரிகள் ஆலப்புழாவில் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது தாம் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகவும் அதில் இருந்து விடுபட உதவ வேண்டும் என அதிகாரிகளிடம் கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து தொடுபுழாவில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ அனுமதிக்கப்பட்டார்.

 
அதேபோல ‘தள்ளுமலா’, ‘ஆலப்புழா ஜிம்கானா’ ஆகிய படங்களை இயக்கிய காலித் ரகுமார், ‘பீமண்டே வழி’, ‘சுலைக்கா மன்ஜில்’ படங்களை இயக்கிய அஷ்ரஃப் ஹம்சா ஆகியோர் உயர் ரக கஞ்சாவை பயன்படுத்தியதாக கூறி கலால் துறையினர் அவர்களை கைது செய்தனர். மலையாள சினிமாவில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this story