கிரிக்கெட் கதையை இயக்க தயாரான ‘கௌதம் மேனன்’.
கௌதம் மேனன் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது.
கோலிவுட்டின் முன்னணி இயக்குநரான கௌதம் மேனன் படங்களை இயக்குவதற்கு பிரேக் விட்டு நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பியுள்ள அவர் என்ன மாதிரியான படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான் ஆட்டத்தின் போது நடிகர் ஆர்.ஜே பாலாஜி கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் அடுத்து கிரிக்கெட்டை மைய்யமாக வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளதாக தெரிவித்தார். அதாவது இருவர் மாவட்ட அளவிலிருந்து மாநில அளவிற்கு தகுதிபெறுவதை சொல்லும் கதை என் கூறியுள்ளார். இந்த கதை சச்சின் மற்றும் கம்ப்லி இருவரை மைய்யமாக வைத்து தயாராகவுள்ளதாக கூறினார். இந்த தகவல் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.