தனது மகளை கொடுமைப்படுத்தினர்... நடிகர் ராஜ்கிரண் குற்றச்சாட்டு...

தனது மகளை கொடுமைப்படுத்தினர்... நடிகர் ராஜ்கிரண் குற்றச்சாட்டு...

பிரபல நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா என்பவர், தொலைக்காட்சி சீரியல் நடிகர் முனீஸ் ராஜா என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அந்த திருமணத்திற்கு ராஜ்கிரண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முனீஸ்ராஜா ஒரு மட்டமான புத்தி கொண்டவர் என்றும் பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமானவர் என்றும் அது மட்டும் இன்றி ஜீனத் பிரியா தனது உண்மையான மகள் இல்லை என்றும் அவர் தனது வளர்ப்பு மகள் என்றும் தன்னுடைய பேச்சை மீறி திருமணம் செய்து கொண்ட அவருக்கும் எனக்கும் இனி எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முனீஸ்ராஜாவை திருமணம் செய்து கொண்ட ஜீனத் பிரியா ஒரே வருடத்தில் தனது கணவரை விட்டு பிரிந்து விட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

தனது மகளை கொடுமைப்படுத்தினர்... நடிகர் ராஜ்கிரண் குற்றச்சாட்டு...

இது தொடர்பாக பதில் பேசிய ராஜ்கிரண், முனீஸ் ராஜா தினமும் மது அருந்திவிட்டு தன் மகளை அடித்து உதைத்து கொடுமைப் படுத்துவதாகவும், எங்களிடம் இருந்து பணம் வாங்கி வருமாறு சித்திரவதை செய்வதாகவும் தெரிவித்தார். 

Share this story