சினிமாவை விட்டு விலக முடிவெடுத்தேன் - விக்ராந்த்

சினிமாவை விட்டு விலக முடிவெடுத்தேன் - விக்ராந்த்

நீண்ட நாட்களாக சூப்பர் ஹிட் வெற்றிக்காக போராடி வரும் ஹீரோக்களில் ஒருவர் விக்ராந்த். ஹீரோவாக சில படங்களில் நடித்திருந்தாலும் உதயநிதியின் ‘கெத்து’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். தற்போது லால் சலாம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள இப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். விக்ராந்துடன் இணைந்து விஷ்ணு விஷாலும் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமாவை விட்டு விலக முடிவெடுத்தேன் - விக்ராந்த்

இந்நிலையில் 15 ஆண்டுகளாக சினிமாவில் முன்னேற்றம் இல்லாததால், இத்துறையை விட்டே விலக முடிவெடுத்ததாக நடிகர் விக்ராந்த் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் தான் லால் சலாம் பட வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் அவர் கூறினார். 
 

Share this story