எனக்கு நிறைய சம்பள பாக்கி இருக்கு.. நடிகர் யோகி பாபு பதிலடி...!

“எனக்கு எவ்வளவு பேர் சம்பளம் பாக்கி கொடுக்க வேண்டும் தெரியுமா?” என நடிகர் யோகிபாபு மேடையில் எமோஷனலாக பேசியுள்ளார்.
வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் 'ஜோரா கைய தட்டுங்க' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் யோகி பாபு. இப்படத்தினை ஜாகிர் அலி தயாரித்துள்ளார். இதில் ஹரிஸ் பேரடி, வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன். சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் யோகிபாபு கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், “இந்த படத்தை மிகவும் கஷ்டப்பட்டு தயாரிப்பாளர் எடுத்துள்ளார். நான் கஷ்டம் என்று சொன்னது என்னால் அல்ல, பணப்பிரச்சினையால் சொல்கிறேன். அதற்காகவே இந்த படம் வெற்றி பெற வேண்டும்.
பத்தாண்டுகளுக்கு முன்பு இதே இயக்குனர் படத்தில் ஆயிரம் ரூபாய் வருமானத்தில் நான் நடித்துள்ளேன். அதன்பிறகு ஐந்தாண்டுகள் கழித்து இவர் குறுஞ்செய்தி அனுப்பினார் உடனே அவரை கண்டுபிடித்தேன். பிறகு கதை ஒன்றைக் கூறினார். அப்படி தொடங்கிய தான் இந்த படம். நான் பழசை மறக்க மாட்டேன். என் வருமானம் எனக்கே தெரியாது. வெளியில் உள்ளவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள் நான் என் சம்பளத்தை குறைத்து விடுகிறேன். ஒப்பந்தம் செய்த வருமானத்தை கேட்டதற்கு தான் இங்கு பிரச்சனையே. எனக்கு எவ்வளவு பேர் சம்பளம் பாக்கி கொடுக்க வேண்டும் தெரியுமா? ஒத்துழைப்பு வழங்கி தான் படங்களை செய்து வருகிறேன். தவறாக பேசுபவர்களை கடவுள் பார்த்து கொள்வார்” என்றார்.
அண்மையில் ‘கஜானா’ பட நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் ராஜன், “புரமோஷனுக்கு வர ரூ.7 லட்சம் கேட்கிறார் யோகிபாபு. அவர் நடிகராக இருக்க லாயக்கில்லாதவர்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு தான் தற்போது யோகிபாபு விளக்கம் அளித்துள்ளார்.