அனிமல் படத்தில் நான் நடித்திருக்கவே மாட்டேன் - விளாசிய டாப்ஸி

அனிமல் படத்தில் நான் நடித்திருக்கவே மாட்டேன் -  விளாசிய டாப்ஸி

அர்ஜூன் ரெட்டி படத்திற்கு பிறகு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இந்தியில் உருவாகி உள்ள திரைப்படம் அனிமல். இப்படத்தில், ரன்பீர் கபூர் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சைக்கோ கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. ஹஸ்வர்தன் ராமேஸ்வர் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். இத்திரைப்படம் கடந்த 1-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பிரபல எழுத்தாளர் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ஆகியோர் படத்தை கடுமையாக சாடியிருக்கின்றனர். 

அனிமல் படத்தில் நான் நடித்திருக்கவே மாட்டேன் -  விளாசிய டாப்ஸி

இந்நிலையில் அனிமல் படம் தொடர்பாக பேசிய நடிகை டாப்ஸி, நானாக இருந்தால் அனிமல் படத்தில் நிச்சயமாக நடித்திருக்க மாட்டேன். திரைத்துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு சில பொறுப்புகள் உண்டு என அவர் தெரிவித்துள்ளார். 
 

Share this story