“ பாசத்தில் அப்பா 8 அடி என்றால், மகன் சிம்பு 16 அடி... நடிகர் கமல்ஹாசன்

kamal

என் மீது உள்ள பாசத்தில் அப்பா டி ஆர் 8 அடி என்றால், மகன் சிம்பு 16 அடி பாய்வார் பாசத்தில் தந்தையை மிஞ்சிவிட்டார்” என ‘தக் லைஃப்’ நிகழ்வில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகிறது. இது தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் மணிரத்னம், கமல்ஹாசன், த்ரிஷா, சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.விழாவில் பேசிய கமல்ஹாசன், “உயிரே, உறவே தமிழே!. இதை தமிழில் சொல்லிக்கொள்கிறேன். தமிழில் மொழி பெயர்த்தால் நன்றாக இருக்காது. இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் இப்போது பேசுகிறேன். விருந்தோம்பல் தமிழனுக்கு கைப்பழக்கம். அதை 2 ஆயிரம் ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறோம்.

thug life

நான் 11 வயதிலிருந்து அபிராமியை பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் அவர். “பக்கத்தில் த்ரிஷா அமர்ந்திருக்கிறார், அதை கருத்தில் கொண்டு வயதை தவிர்த்திருக்கலாம். பரவாயில்லை, நான் அதையெல்லாம் தாண்டி வந்துவிட்டேன். இப்போது அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. மணி ரத்னமும் நானும் எல்டாம் ரோட்டில் அமர்ந்து நிறைய பேசியிருக்கிறோம். நாங்கள் பேசியதில் 25 சதவீதம் நிறைவேற்றி விட்டோம். அதில் ஒன்று ‘நாயகன்’. மற்றொன்று ‘தக் லைஃப்’. இன்னும் நாங்கள் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.kamal
 

எதிர்காலத்தில் இன்னும் பிரமாண்டமான படங்களை உருவாக்க இருக்கிறோம். உங்களால் தான் நாங்கள் இந்த இடத்தில் இருக்கிறோம். மக்கள் இடமிருந்து வரும் தீர்ப்புக்கு நாங்கள் அனைவரும் தலை வணங்குகிறோம். இவர் வெறும் மணிரத்னம் இல்லை. ஐஞ்சரை மணி ரத்னம். தினமும் 5 அரை மணிக்கு வந்துவிடுவார். ‘நாயகன்’ படத்திலிருந்தே அப்படித்தான். 6 மணி ஷூட்டிங்குக்கு 5 மணிக்கே வந்துவிடுவார். படப்பிடிப்பு தளத்திலும் சினிமா பற்றி பேசினால் தான் அரட்டை அடிக்க முடியும். இதை நான் இயக்குநர் பாலச்சந்தரிடம் கண்டிருக்கிறேன். ரவி கே சந்திரன் அட்டகாசமான ஒளிப்பதிவை செய்திருக்கிறார்.


சிம்புவின் அப்பாவுக்கு என் மீது அளவு கடந்த பாசம். எனக்கு எதாவது ஒன்று என்றால், என் சட்டையை நனைத்துவிடுவார். அப்பா 8 அடி என்றால், மகன் சிம்பு 16 அடி பாய்வார். பாசத்தில் தந்தையை மிஞ்சிவிட்டார். பொறாமையும், போட்டியும் நிறைந்த இந்த திரைத்துறையில் இப்படியெல்லாம் நட்பு கிடைப்பது கஷ்டம்.
45 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பேசியதை இன்று சாத்தியமாக்கியுள்ளோம். நாங்கள் படித்ததே சினிமா தான். இந்தப் படத்தில் நீங்க எதிர்பார்க்கும் அனைத்தும் இருக்கும். ஆனால் வேறு மாதிரி இருக்கும்” என்றார்.

Share this story