இசையில் புதிய சாதனையை செய்ய இருக்கும் இளையராஜா -என்ன தெரியுமா ?

ilaiyaraja

இசையமைப்பாளர் இளையராஜா தமிழ் சினிமாவில் பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் .இவர் இசையில் புதிய சாதனை படைக்க இருக்கிறார் .அது பற்றி நாம் காணலாம் 
லண்டனில் கடந்த மார்ச் 8ம் தேதி ‘வேலியன்ட்’ என்ற தலைப்​பில் பாரம்​பரிய சிம்​பொனி இசையை, அங்குள்ள ஈவென்​டிம் அப்​போலோ அரங்​கில் அரங்​கேற்​றம் செய்​தார் இளையராஜா. இதை அவர், உலகின் மிகச்சிறந்த ராயல் பில்​ஹார்மோனிக் இசைக்​குழு​வுடன் இணைந்து அரங்​கேற்​றி​னார். அவரது இசைக்குறிப்​பு​களை நூற்​றுக்​கணக்​கான கலைஞர்​கள் பல்​வேறு இசைக்கருவி​களில் ஒரே நேரத்​தில் இசைத்​தது ரசிகர்​களை பரவசத்​தில் ஆழ்த்​தி​யது. இதன்​மூலமாக, ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழுதி அரங்​கேற்​றிய முதல் இசை அமைப்​பாளர் என்ற மிகப்பெரிய சாதனையை இளை​ய​ராஜா படைத்​தார்.
இந்நிலையில், அடுத்து தனது புதிய சிம்பொனி இசை குறித்த அறிவிப்பை நேற்று இளை​ய​ராஜா​ வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். எனது அடுத்த சிம்பொனியை எழுத இருக்கிறேன். அத்துடன் புதிய படைப்பாக, ‘சிம்பொனி டான்சர்ஸ்’ என்ற புதிய இசைக்கோர்வையை எழுத இருக்கிறேன். இதை உங்களுக்கு தீபாவளி நற்செய்தியாக தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Share this story