இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

பிரபு தேவா நடிப்பில் வெளியாகியிருந்த 'ராசய்யா' திரைப்படத்தில் மூலம்தான் பாடகியாக அறிமுகமானார் பவதாரிணி. பின்னணி பாடகியாகத் தனது கரியரைத் தொடங்கியவர் நாளடைவில் பல படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார். நடிகை ரேவதி இயக்கிய 'மித்ரு, மை பிரெண்ட்' திரைப்படத்தின் மூலமாகத்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். பவதாரிணி கடைசியாக 'அனேகன்' திரைப்படத்தில் 'ஆத்தாடி ஆத்தாடி' பாடலைப் பாடியிருந்தார். அதேபோல இசையமைப்பாளராக இவர் பணியாற்றிய கடைசி படம் 'மாயநதி'.

இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்

பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அதற்காக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டு வந்தவர், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

Share this story