“நன்றி கமல் சார்.. க்ளைமேக்ஸில் சந்திக்கிறேன்” - ‘இந்தியன் 2’ குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த ஷங்கர் !

indian 2

கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் தென் ஆப்ரிக்கா ஷெட்டியூல் நிறைவுபெற்றுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். 

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகி இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த்த்,  பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

indian 2

சில பிரச்சனைகளால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே சென்னை, திருப்பதி, பீகார் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதையடுத்து சமீபத்தில் தைவான் நாட்டிற்கு சென்ற இந்தியன் 2 படக்குழு, பாடல் காட்சிகளை படமாக்கினர். 

indian 2

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா சென்ற கமல் மற்றும் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர், அங்கு பிரம்மாண்ட சண்டை காட்சி ஒன்றை படமாக்கி வந்தனர். பழங்கால ரயில் ஒன்றில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்ததது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவுபெற்றுள்ளது. இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் ஷங்கர், பவர் பேக்டு ஷெட்யூலுக்கு நன்றி கமல் சார். மீண்டும் உங்களை மே மாதம் சந்திக்கிறேன். இந்தியன் 2-ல் இருந்து கேம் சேஞ்சர் பட க்ளைமேக்ஸை படமாக்க செல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

 

Share this story