ஐ.பி.எல் கிரிக்கெட் வர்ணனை : ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்...

நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி, இந்த வருடம் ஐ.பி.எல் கிரிக்கெட் வர்ணனை செய்யாதது குறித்து விளக்கமளித்துள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ’சூர்யா 45” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை டிரிம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஆர்.ஜே. பாலாஜி வர்ணனை செய்வார். கிரிக்கெட் வர்ணனையில் இவருக்கு தனி ரசிகர்கள் உண்டு. ஆனால் இந்தாண்டு ஐபிஎல் தொடங்கி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் இந்த நிலையில் இந்த சீசனில் ஆர்.ஜே. பாலாஜி கிரிக்கெட் வர்ணனை செய்யவில்லை.
இது தொடர்பாக ஆர்.ஜே. பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "வருஷத்திலேயே எனக்கு ரொம்பவும் பிடிச்சது மார்ச் மாதத்தின் கடைசி, ஏப்ரல், மே தான். இந்த நேரத்தில் நான் எனக்குப் பிடித்த வேலையை செய்வேன். ஆனால் இந்த வருடம் ஐபிஎல் கமெண்டரியில் நான் வரமாட்டேன். நான் எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக செய்ய வேண்டும் என நினைப்பேன். இப்பொழுது ஒரு படத்தை இயக்கி, அதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன். அதனால் இந்த வருடம் ஐபிஎலுக்கு பிரேக் விட்டுவிட்டேன். நிச்சயம் அடுத்த சிசனில் வருவேன். ஆனால் என்னை பார்ப்பவர்கள் அண்ணன் நாளைக்கு வந்துருவிங்களா? நேத்து ஏன் வரல நாளைக்கு வருவிங்களா? என்று கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது" என்று எமோஷனலாக ஆர்.ஜே. பாலாஜி பேசியுள்ளார்.