"திரில்லர் கதையில் நடிக்க விரும்புகிறேன்’ -ஐஸ்வர்யா ராஜேஷின் ஆசை

aishwarya rajesh

தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘இதுவரை நான் பாசிட்டிவ் வேடங்களில் மட்டுமே நடித்துள்ளேன். வில்லியாக நடிக்க சரியான வாய்ப்புகள் எனக்கு அமையவில்லை. ‘படையப்பா’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்திருந்த நீலாம்பரி என்ற நெகட்டிவ் ஷேட்ஸ் கொண்ட, வலிமையான ஒரு வில்லி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ‘அப்செஷன்’ போன்ற உளவியல் திரில்லர் கதை களிலும் நடிக்க விரும்புகிறேன்’ என்றார்.

Share this story