கவனிக்க வேண்டியது விளையாட்டை அல்ல.. விளையாடுபவர்களின் யுக்தியை: விஜய் சேதுபதி..!

vijay sethupathi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 19 நாட்கள் முடிவடைந்து, இன்று 20வட்ஜி நாள் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது. இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.


இன்றைய எபிசோடு விஜய் சேதுபதி எபிசோடு என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்றைய புரமோவில் விஜய்சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சில கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார். விளையாட்டு ஒன்றுதான்; அதில் கட்டம் கட்டுகிறார்களா?, ஆக்ரோஷத்தை காட்டுகிறார்களா என்பதை வைத்து, விளையாடுபவர்கள் யார் என்பதை நமக்கு சொல்கிறது.

 


"நாம் கவனிக்க வேண்டியது விளையாட்டு அல்ல, அவர்களின் யுக்தி, அவர்களின் புத்தியை கவனிக்க வேண்டும்," என்று கூறுவதுடன் , இன்றைய முதல் ப்ரோமோ முடிவடைகிறது.


மொத்தத்தில், இந்த ப்ரோமோவில் வழக்கம்போல சில போட்டியாளர்களை விஜய் சேதுபதி வறுத்தெடுப்பார் என்றும் சில போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Share this story