‘ஜெய் பீம்’ படத்திற்கு விருது கொடுக்காதது ஏமாற்றம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள் !

jai bhim
 சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சூர்யாவின் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் 'ஜெய் பீம்'. ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவான இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. இருளர் பழங்குடியின மக்களின் உரிமைகள் குறித்து பேசிய இப்படம் கடந்த 2021-ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியானது.    

jai bhim

சூர்யா வழக்கறிஞராக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், நடிகை ரெஜிஷா விஜயன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.  நல்ல விமர்சனங்களைப் பெற்ற இப்படம் பல சர்வதேச விருதுகளையும் குவித்தது. அதோடு ஆஸ்கரில் நாமினேட் செய்யப்பட்டது. 

இந்நிலையில் 69வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. அதில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஒரு விருதை கூட பெறாததது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story