ஜெயிலர்-ஐ நிறைவு செய்த சூப்பர் ஸ்டார்.. நெல்சன் கொடுத்த செம்ம அப்டேட்

jailer

‘ஜெயிலர்’ படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளதாக இயக்குனர் நெல்சன் அப்டேட் கொடுத்துள்ளார். 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வருகிறது ‘ஜெயிலர்’. இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.  வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

jailer

இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில் உள்ளிட்ட பல மொழி நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கொச்சியில் நடைபெற்றது. சமீபத்தில் இந்த படப்பிடிப்பில் இறுதிக்கட்ட க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினியின் படப்பிடிப்பு காட்சிகள் அனைத்து நிறைவுபெற்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அப்டேட்டை இயக்குனர் நெல்சன் கொடுத்தள்ளார். 

 

Share this story