படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்ற ரஜினி...'ஜெயிலர்' முக்கிய அப்டேட்

'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று ஐதராபாத் சென்றார்.
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதனால் முழுக்க முழுக்க ஜெயிலில் நடப்பது போன்று காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மிகப்பெரிய அளவில் செட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ரமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் ஐதராபாத் சென்றார். அங்கு ரஜினி நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவுபெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதத்திற்குள் முடிக்க இயக்குனர் நெல்சன் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து உடனடியாக தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டு வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.